கருவின் வளர்ச்சியில் பல்வேறு நிலைகள்
ஆணின் விந்தணு பெண்ணின் சினை முட்டையைச் சினைப்படுத்தும்போது உயிர் உண்டாகிறது.
இது உயிரியல் இயக்கங்களில் மிக முக்கியமானதாகும். சினைப்பட்ட சினைமுட்டை கொஞ்சம் கொஞ்சமாகக் கருவின் துகள் (Blastocyst) என்ற நிலையிலிருந்து (embryo) மாறிப் பிறகு குழந்தையாக உருவெடுக்கிறது.
சினைப்படும் முறை
மாதவிடாய்ச் சுழற்சிக் காலத்தில் சினைப் பைகள் (Ovaries) இரண்டில் ஒன்றிலிருந்து ஒரே ஒரு சினைமுட்டை (ovum) வருகிறது இது அநேகமாக, மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு 14 நாட்களுக்கு முன் நிகழும். இந்த இயக்கத்தைச் சினைமுட்டைப்படுதல் (Ovulation) என்று கூறலாம்.
சினைக்குழாயில் (Fallopian tubes) இருக்கும் விரல்கள் போன்ற நீட்சிகள் சினை முட்டையைச் சினைக் குழாயின் குவிந்த முனைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திச் செல்லும்.
சினை முட்டை படும்போது கருப்பை வாயில் இருக்கும் சளி போன்ற கொழகொழப்பான திரவம் நீர்த்துப் போகிறது. இதனால் விந்தணு கருப்பைக்குள் எளிதில் நுழைய முடிகிறது. சற்று நேரத்தில், வாக்கமாகச் சில நிமிடங்கிலேயே, விந்தணு பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து கருப்பை வாய் வழியாகக் கருப்பைக்குள்ளும், சினைக் குழாய்ககுள்ளும் விரைவாக நகர்ந்து சென்று விடும்.
சினைக் குழாயில் தான் சினைப்படுதல் நிகழ்கிறது. அவ்வாறு சினைப் படவில்லையென்றால், சினைமுட்டை சிதைந்து கருப்பை வழியே அடுத்த மாதவிடாயின்போது வெளியேறிவிடும்.
சினைமுட்டையை விந்தணு துளைத்துக் கொண்டு உள்ளே போனபிறகு சினைப்படுதல் (Fertilisation) நிகழ்கிறது. சினைப்பட்டதும், சினை முட்டை பிரிந்து செல்களால் ஆன பந்தாக ஆகிறது. இதற்கு “சைகோட்” (Zygote) என்று பெயர்.
சினைக் குழாயின் உட்படலத்தில் இருக்கும் நுண்ணிய மயிர் போன்ற அமைப்பு இந்தத் திரண்ட பந்து போன்ற சைகோட்டைக் குழாய் வழியே கருப்பையை நோக்கித் தள்ளிக்கொண்டு போகும். சினைக்குழாயில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் போதே சைகோட்டின் செல்கள் மேன்மேலும் பிரிகின்றன.
மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் சைகோட் கருப்பையை அடையும். கருப்பையில் செல்கள் தொடர்ந்து பிரிந்து மேலும் பிரிந்து செல்களால் ஆன ஒரு பந்து போல உருவெடுத்து (Blastocyst) கருவின் துகளாக மாறும்.
கருத்துகளின் வளர்ச்சி
சினைப்பட்ட ஆறு அல்லது ஏழு நாட்களுக்குப் பிறகு கருவின் துகள் கருப்பையின் உட்படலத்தில் ஒட்டிக்கொள்ளும். பெரும்பாலும், இது கருப்பையின் மேல் பக்கத்தில் நிகழும். இப்படி ஒட்டிக் கொள்வதைப் பதிதல் என்று சொல்லலாம். இப்படிப் பதிவது சினைப்பட்டதிலிருந்து ஒன்பதாவது அல்லது பத்தாவது நாளில் நடைபெறும். இந்தச் சமயத்தில் நான்கு நாட்கள் வரை கருப்பையின் உட்படலம். கருவின் துகளை ஏற்பதற்கும் அது உட்படலத்தில் பொதிந்து கொள்வதற்கும் தயாராக இருக்கும்.
கருப்பையின் சுவருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இடத்தில் கருவின் துகள் மூன்று அல்லது நான்கு செல்கள் அளவு தடிமனாக இருக்கும். அதற்கு எதிர்ப்புறம் ஒரு செல் தடிமனில் இருக்கும். கருப்பையின் சுவரில் ஒட்டியிருக்கும் பகுதியின் உட்புறத்தில் இருக்கும் செல்கள் கருவாக உருவெடுக்கும். கவரைப் பற்றிக் கொண்டிருக்கும் வெளிப்புறச் செல்கள் நச்சுக் கொடியாக உருவெடுக்கும். இதுதான் சிசுவிக்கும் தேவையான பிராண வாயுவையும். சத்து களையும் அது கொண்டு செல்கிறது. அதே போல் அது சிசுவின் கழிவுகளைத் தாய்க்கு வெளியேற்றுகிறது.
இதன் முக்கியமான பணிகளில் ஒன்று, கருவைத் தக்கவைத்துக் கொள்வதில் உதவும் இயக்குநீர்களைச் சுரப்பது. எடுத்துக்காட்டாக சினைப்பைகள் தொடர்ந்து சினை முட்டைகளை உருவாக்குவதைத் தடுக்கும் hCG என்னும் இயக்குநீரை நச்சுக்கொடி உற்பத்தி செய்கிறது. இதை இயக்குநீர் மாதவிடாய் ஏற்படுவதை நிறுத்தி, சினைப்பைகள் இஸ்ட்ரோஜென், ப்ரொஜெஸ்டரோன் என்னும் இயக்குநீர்களை உற்பத்தி செய்வதைத் தூண்டுகிறது.
இந்த கருத்துகளின் சுவர் போன்ற பகுதிதான், கருவைச் சுற்றியுள்ள மெல்லிய தோள் பகுதியாக (Chorion) மாறுகிறது. 10வது நாளிலிருந்து 12வது நாளுக்குள் உட்புறமும் ஒரு மெல்லிய படலம் (amnion) உருவாகி அதுவே பனிக்குடமாக மாறுகிறது. இது பனிநீரால் நிரம்பியிருக்கும். கருவும் அதில் மிதந்த படியே வளரும்.
நச்சுக்கொடி வளர்ச்சியடையும்போது நுண்ணிய விரல்களைப் போன்ற நீட்சிகளைக் கருப்பையின் சுவருக்குள் நீளச்செய்கிறது. இந்த நீட்சிகள் கிளைத்து, அவை மேலும் குறுக்கும்நெடுக்கும் வளர்ந்து ஒரு மரத்தைப் போன்ற அமைப்பாக உருவெடுக்கின்றன. இந்த அமைப்பு நச்சுக்கொடியும் கருப்பையின் சுவரும் ஒன்றை ஒன்று உறுதியாகப் பற்றியிருக்குமாறு செய்கிறது.
வில்லை (Villi) என்று அழைக்கப்படும் இந்த நீட்சிகள் தாயின் ரத்த ஓட்டத்துடன் எப்போதும் தொடர்பு கொண்டதாக இருக்கும். இப்படி இருப்பதால் சத்துகள் உறிஞ்சப்படுவதும், எளிதாக நடக்கின்றன. பிரசவத்தின் போது நச்சு கொடி சுமார் 500 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.
கருவின் வளர்ச்சி
கருத்தரிப்பில் அடுத்த கட்டம் கருவின் (embryo) வளர்ச்சி. கருவின் இந்தக் கட்டம் கர்ப்பகாலத்தில் ஐந்தாவது வாரம் முதல் பத்தாவது வாரம்வரை நீடிக்கிறது. உள்ளுறுப்புகளிலும், வெளி உறுப்பு களிலும் பெரும்பாலானவை இந்தக் கட்டத்தில் உருக் கொள்கின்றன.
அங்கங்கள் உருக்கொள்வது கருத்தரித்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, அடையாளம் காண முடிகிற அளவுக்கு நிகழ்கிறது. விரைவில், பிற்பாடு மூளையாகவும், முதுகுத் தண்டாகவும் உருவாகும். பகுதிகள் தோன்றுகின்றன.
இதயமும் முக்கியமான ரத்தக் குழாய்களும் 16வது அல்லது 17 வது நாளில் வளரத் தொடங்கும். 20ஆம் நாள் இதயம் குழாய்களில் திரவத்தைச் செலுத்த ஆரம்பிக்கும். அடுத்த நாள், முதல் சிவப்பு ரத்த அணுக்கள் தோன்றும். பத்தாவது வாரத்திற்குப் பிறகு, இப்படி வளரும் செல் தொகுதியை கருக்குழந்தை (Fetus) என்று கூறுவோம்.
கருவில் குழந்தை மேலும் வளர்ச்சியடைதல்
12வது வாரம்
நீங்கள் கருத்தரித்து 12வது வாரம் ஆன பிறகு, உங்கள் அடிவயிற்றில் லேசாகத் தோட்டுப் பார்த்தால் கருப்பையை உணர முடியும். அப்போது உள்ளே இருக்கும் குழந்தை 6&7 செ.மீ. வரை வளர்ந்திருக்கும். உள்ளே உறுப்புகள் உருவாகத் தொடங்கி, முழுவதும் வளர்ச்சிய¬டாமல் இருக்கும்.
கைகளிலும் கால்களிலும் விரல்களும் மெல்லிய நகங்களும் உருவாக ஆரம்பித்திருக்கும் பருவம் இது. தோல் மெதுவாக வளர்ச்சியடையும். இது மிகவும் மெல்லியதாக இருக்கும். கொஞ்சம் தலை முடியையும் காண முடியும்.
இந்தக் கால கட்டத்தில்தான் தசைகளும் எலும்புகளும் வளர ஆரம்பிக்கின்றன. கால்களை
“கரு”என்ற நிலையிலிருந்து கருக்குழந்தையாக மாறுதல்!
6 வது வார முடிவில்
- உடலில் உறுப்புகள் வளரத் தொடங்கி அவற்றின் கூட்டமைகளும் (Systems) உருவாக ஆரம்பிக்கின்றன.
- உள்ளே உள்ள கரு ஒரு தவளைக் குஞ்சு போலத் தோற்றமளிக்கும்.
- நரம்புக் குழாய், மூளை மற்றும் முதுகுத் தண்டாக பின்பு மாறக்கூடியவை. ஜீரண உறுப்புகள், இதயம் மற்றும் இரத்தக் குழாய்கள் போன்றவை உருவாகத் துவங்குகின்றன.
- கண்கள் மற்றும் காதுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
- கைகால்களின் முளைகள் அரும்புகின்றன (இவையே பின்பு கைகள், கால்களாக வளர்ச்சி அடைகின்றன).
- இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது.
8 வது வார முடிவில்
- உடலின் அனைத்து உறுப்புகள், அவற்றின் கூட்டமைப்புகள் வளர்ந்து கொண்டே செயல்படவும் ஆரம்பிக்கின்றன. இரத்தக்குழாய்கள். நரம்பு மண்டலம், ஜீரண மண்டலம், சிறுநீரக மண்டலம் போன்றவை உட்பட அனைத்துமே வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றன.
- கருவிற்கு மனித உயிரை ஒத்த வடிவம் வந்து விடுகிறது. பிற உறுப்புகளை விடத் தலை மிகவும் பெரிதாக உள்ளது.
- வாய்ப்பகுதி வளர்ந்து, பல்லின் முளைகளும் (இவை பின்பு பால் பற்களாக மாறும்) தோன்றுகின்றன.
- கண்கள், மூக்கு, வாய், காதுகள் போன்றவை தனித்தனியாகத் தெரிய ஆரம்பிக்கின்றன.
- கைகளும் கால்களும் நன்கு தனித்தனியாக வெளியே தெரிகின்றன.
- கைவிரல்களும், கால் விரல்களும் தனித்தனியாகப் பிரிந்திராமல் ஒட்டிக் கொண்டதுபோல இருக்கின்றன. ஆனாலும் தெளிவாகத் தெரிகின்றன.
- உடலின் முக்கிய உறுப்புகள் வளரத் தொடங்குகின்றன.
- மெதுவாக எலும்புகள் வளர ஆரம்பிக்கின்றன. மூக்கு, மேல் அன்னம், கீழ் அன்னம் போன்ற பகுதிகள் வேகமாக வளர்கின்றன.
- உடலின் முக்கிய உறுப்புகள் வளரத் தொடங்குகின்றன.
- மெதுவாக எலும்புகள் வளர ஆரம்பிக்கின்றன. மூக்கு, மேல் அன்னம், கீழ் அன்னம்.
- உள்ளே இருக்கும் கரு எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும். ஆயினும் அதைத் தாயால் உணர முடியாது.
- 10 வாரங்களுக்குப் பின் கரு, “கருவில் உள்ள குழந்தை, என்றே அழைக்கப்படுகிறது; அறியப்படுகிறது. இந்தக் கால கடத்தில் கரு 2.5 முதல் 3.5 செ.மீ அளவு மட்டுமே வளர்ந்திருந்தாலும் எல்லா உறுப்புகளும் அவற்றின் கூட்டமைப்புகளும் உள்ளே உருவாகியிருக்கும்.
10 முதல் 12 வாரங்கள் வரை
- வெளியே உள்ள பாலின உறுப்புகள் வளர ஆரம்பிக்கிறன்றன.
- கை, கால் விரல்களுக்கு நகங்கள் வளர்கின்றன.
- கண் இமைகள் தோன்றுகின்றன
- கருவில் உள்ள குழந்தை வேகமாக அசைந்து கொண்டே இருக்கிறது
- கைகள், கால்கள், முழுவதுமாக உருவாகி விடுகின்றன.
- குரல் வளை, தொண்டைப் பகுதியில் உருவாகத் தொடங்குகிறது.
விடக் கைகள் சற்று வேகமாக வளருகின்றன. சாதாரணமாக கைகள் கால்களை விட நீளமாகவும் இருக்கும். பாலின உறுப்புகள் தோன்ற ஆரம்பித்து குழந்தை ஆணா பெண்ணா என்ற வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். கருவில் உள்ள குழந்தை ஒரே சீராக இல்லாமல் துள்ளலுடன், மாறி மாறி நகர்ந்து கொண்டே இருக்கும்.
ஆனால் தாயால் இந்த நிலையில் அந்த இயக்கத்தை உணர முடியாது. சில மாதங்களுக்குப் பிறகுதான் தாயால் குழந்தையின் அசைவுகளை உணரமுடியும், ஆனால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் வெகு தெளிவாகக் குழந்தையின் அசைவுகளை, இந்த நிலையிலேயே பார்க்க முடியும்.
இந்த முதல் 12 வாரங்களில், கருவில் உள்ள குழந்தை மிக எளிதில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் அப்போது தான் அதன் முக்கிய உறுப்புகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
ஒரு சில மருந்துகளைத் தாய் எடுத்துக் கொண்டாலோ, ஜெர்மன் மீஸில்ஸ் நோயினாலோ, கதிரியக்கத்தினாலோ (radiation) அல்லது இராசயனப் பொருட்கள், நச்சுப் பொருட்கள் இவைகளினாலோ கருவிற்கு ஆபத்துகள் நேரலாம்.
இந்த 12 வாரங்களிலேயே கருவில் உள்ள குழந்தைக்கு கை, கால்கள் முளைத்து பிற உறுப்புகளும் ஓரளவு உருவாகி இருந்தாலும், அதனால் தாயின் வயிற்றுக்கு வெளியே தனி உயிராக செயல்பட முடியாது.
16வது வாரம்
16 வாரங்களின் முடிவில் கருவில் உள்ள குழந்தையின் எடை 110 கிராம் வரை இருக்கும். 15&17 செ.மீ நீளமாய் இருக்கும். கண் இமைகள், புருவங்கள், நகங்கள் பிறப்புறுப்புகளும் முழுவதும் தோன்றியிருக்கும். தோல் சுருக்கங்களுடன் இருக்கும்.
உடலின் மேல் மெழுகுப் பிசின் போல ஒன்று (vernix) தடவப்பட்டது போலவும், மெல்லிய ரோமங்களும் (lanugo) காணப்படும். காதுகளின் வெளிப்புறங்கள் மெதுவாக வெளியே வரத் தொடங்கும். இந்தச் சமயத்தில் தான் கருவில் உள்ள குழந்தையால் முழுங்க முடியும். சிறுநீரகங்களும், சிறுநீரை வெளியேற்றத் தொடங்குகின்றன.
20 வது வாரம்
கர்ப்ப காலத்தில் கிட்டத்தட்ட நடுப் பகுதிக்கு வந்துவிட்டீர்கள் என்றே கொள்ளலாம். சாதாரணமாக கர்ப்ப காலம் என்பது 40 வாரங்கள் வரை இருக்கலாம்.
இப்போது கருவில் உள்ள குழந்தையின் எடை ஏறக்குறைய கருவில் உள்ள குழந்தையின் எடை ஏறக்குறைய 300 கிராம் வரை இருக்கும்.
இந்த சமயத்திலிருந்து கருவில் உள்ள குழந்தை மிக வேகமாக வளர ஆரம்பிக்கிறது. 25 செ.மீ நீளம் இருக்கும். தானாகவே “சப்புதலை” அறிந்து கொள்கிறது. அதன் கைகள் ஒரு வேளை வாய்க்குப் பக்கத்தில் வந்தால் உடனே விரல் சப்ப ஆரம்பித்து விடுகிறது!
அது மட்டுமில்லாமல் தூங்குவது, விழிப்பது இவை எல்லாவற்றையுமே கிட்டத்தட்ட ஒரு குறிப்பிட்ட முறையில் செய்யத் துவங்குகிறது!
நாம் “தொட்டில் பழக்கங்கள்” என்று நினைத்துக் கொண்டிருக்கும் இவை எல்லாம் உண்மையிலேயே இங்கேயே தொடங்குகின்றன விரல்களின் நுனிகளில் சின்னச் சின்ன நகங்கள் போட்டு விடும்.
அவனோ அவளோ சுறுசுறுப்பாய் உள்ளே அசையத்துவங்கி, தாய்க்கும் அந்த அசைவுகள் தெரிய ஆரம்பிக்கும்.
குழந்தை பெண்ணாக இருந்தால், அதற்குள்ளாகவே சினைப்பையில், அக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தோன்றக் கூடிய சினை முட்டைகள் எல்லாமே உருவாகி இருக்கும். ஆணாக இருந்தால், விரைப் பைக்குள் விரைகள் இறங்கி அடிவயிறிலிருந்து வெளியே வர ஆரம்பிக்கும்.
24 வது வாரம்
24 வது வாரம் முடிவடையும் சமயத்தில் கருக்குழந்தை 30 செ.மீ நீளமும் ஏறக்குறைய 630 கி எடையும் இருக்கும். தோல் சுருங்கி, தோலின் கீழ் கொழுப்பு சேர ஆரம்பிக்கும் பருவம் இது.
இன்னும் தலை பெரிதாகவேதான் இருக்கும். தலை முடி வளரத் தொடங்கும். இந்தக் காலத்தில் கண் இமைகளின் ரோமங்கள் புருவங்களும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும். மூளை வேகமாக வளரத் தொடங்கும்.
கண்களை மெதுவாகத் திறக்கும். கை கால் விரல்களின் ரேகைகள் அறிய முடியும். நுரையீரல்கள் முழுவதும் உருவாகியிருக்கும். ஆனால் செயல்படத் துவங்கியிருக்காது. இந்த சமயத்தில் அக்குழந்தையால் ஒலிகளைக் கேட்கவும் முடியும். இந்தச் சமயத்தில் குழந்தை பிறந்து விட்டால், மூச்சுவிட முயற்சிக்குமே தவிர, நுரையீரல்களால் சரிவர வேலை செய்ய முடியாது-
28வது வாரம்
35 செ.மீ நீளமும் 1100 கிராம் எடையுமாய் கருவில் குழந்தை நன்கு வளர்ந்திருக்கும் காலம் இது. ஒளியை உணர்ந்து கண்களை மூடித் திறக்கும். லானுகோ (lanugo) முடிகள் மறைய ஆரம்பிக்கும்.
தோல் சற்று சிவப்பாக மாறி, மெழுகுப் பிசின் போன்ற “வெர்னிக்ஸ்” என்பதால் பூசப்பட்டது போல் இருக்கும். ஒலியைப் புரிந்து கொண்டு அசையும் தன்னுடைய உடலை நீட்டி முறுக்கி சோம்பல் முறித்து, உதைத்து விளையாடும்.
32 வது வாரம்
எல்லா வளர்ச்சியும் கிட்டத்தட்ட முழுமையடைந்துள்ள இந்த நிலையில் கருவில் உள்ள குழந்தை 45 செ.மீ நீளமும் 1800 கிராம் எடையும் இருக்கும். இன்னும் வேகமாக எடை கூட ஆரம்பிக்கும். எலும்புகள் உறுதியாகும்.
ஆனால் மண்டை ஓட்டுப் பகுதிய மட்டும், பேறு காலத்தில் வெளியே வர வசதியாக மிருதுவாகவே இருக்கும். நாக்கில் உள்ள சுவை அரும்புகள் செயல்படத் துவங்கி, குழந்தை இனி இனிப்பையும் புளிப்பையும் சப்புக் கொட்டத் துவங்கும்! எப்போதாவது ஒரே இடத்தில் தொடர்ந்து அசைவு தெரிந்தால். உங்கள் குழந்தையில் விக்கல் தான் அது!
36 வது வாரம்
இந்த மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். 50 செ.மீ நீளமம் 1800 & 2500 கி எடையுமுள்ள குழந்தை ஒவ்வொரு வாரமும் 400 & 500 கி வரை எடை கூடும். தோலின் சுருக்கங்கள் உடல் ஒரு வடிவத்தைப் பெற்று, முகமும் சுருக்கங்கள் நீங்கிக் காணப்படும். நுரையீரல்கள் நன்கு செயல் படத் துவங்கும். பிரசவ காலத்திற்கு ஏற்ப குழந்தையின் தலைப் பகுதி கீழே வந்து விடும் என்பதும் இந்த சமயத்தில் ஒரு முக்கிய நிகழ்வு.
40 வது வாரம்
கருவில் குழந்தையின் வளர்ச்சி முழுவதுமாக தெளிவு பெறும் காலம் இது. ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும் காலத்தில் எடை மாறுபட்டாலும் சாதாரணமாக ஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது சராசரியாக 2500 கி & 3500 கிராம் வரை இருக்கும்.
எப்போது குழந்தை பிறக்கும்?
சாதாரணமாக கர்ப்ப காலம் என்பது 280 நாட்கள் அல்லது 40 வாரங்கள். இது கடைசியாக உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளிலிருந்து கணக்கிடப்படும். குழந்தை என்று பிறக்கும் என்பதை மிகவும் துல்லியமாகக் கணக்கிட்டு சொல்ல முடியாது. 5% குழந்தைகள்தான் அவ்வாறு மிகச் சரியாக எதிர்பார்த்த தேதியிலேயே பிறக்கின்றன. சாதாரணமாக கர்ப்பகாலம் 259 நாட்கள் முதல் 294 நாட்கள் வரை இருக்கலாம் (37 & 42 வாரங்கள்)
சரியாக மாதவிடாய் சுழற்சி இல்லாத பெண்களுக்கு, குழந்தை பிறக்கும் நாளைக் கணக்கிட. கர்ப்ப காலத்தின் முற்பகுதியிலயே அல்ட்ராசவுண்ட் பரிசோதனை தேவைப்படலாம். சில சமயங்களில் சரியாக மாத விடாய் சுழற்சி இருக்கும் பெண்களுக்கும் கர்ப்ப காலத்தின் முற்பகுதியில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை தேவைப்படலாம். அந்தப் பரிசோதனை மூலம் கருக்குழந்தையின் வயதை அறிந்து கொண்டு, அதன்மூலம் பிரசவ நாளைக் கண்க்கிட முடியும். முடிந்தவரை கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே, பிரசவ நாளைக் கணக்கிடுதல் நல்லது. நாட்கள் செல்லச் செல்ல இதைச் சரியாகக் கணிப்பது கடினமாகிவிடும்.
கர்ப்பகாலத்தின் 40 வாரங்களை மூன்று மும்மாதங்களாகப் பிரிக்கலாம்.
ஒவ்வொன்றும் ஏறக்குறைய 12 – 13 வாரங்கள் இருக்கும்.
முதல் மும்மாதம் – 1 – 13 வாரங்கள் ( 1 – 3 மாதங்கள்
2வது மும்மாதம் – 14 – 27 வாரங்கள் (4 – 6 வாரங்கள்)
3வது மும்மாதம் 28 – 40 வாரங்கள் (7 – 9 மாதங்கள்)
குழந்தை பிறக்கப் போகும் நாள் அல்லது பிரசவ நாளை ஆங்கிலத்தில் ணிஞிசி என்றும் குறிப்பிடுவார்கள். இந்த நாளைக் கணக்கிட்டுத் தெரிந்துகொண்டால், நீங்கள் எத்தனை மாதம் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதையும் அதற்கேற்ற அளவில் கருவின் வளர்ச்சி இருக்கிறதா என்பதையும் மகப்பேறு மருத்துவரால் நன்கு அறியமுடியும்.
கருத்தரித்து எத்தனை வாரங்கள் ஆகின்றன?
சென்ற முறை உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளிலிருந்து, நீங்கள் கருத்தரித்த நாளை, உங்கள் மருத்துவர் கணக்கிடுவார். உதாரணமாக மே மாதம் 1ம் தேதி அன்று உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்டிருந்தால், ஜுன் 12ம் தேதி அன்று, உங்கள் கருவின் வயது 6 வாரங்கள் எனக் கொள்ளலாம். உண்மையில் கருத்தரித்த நாளிலிருந்து கணக்கிட்டால் 4 வாரங்களாகக் கொள்ளலாம்.
கருத்தரிப்பதற்கு முன்பு ஆலோசனைகள் (கலந்தாய்வு)
கருத்தரிப்பதற்கு முன்பான ஆலோசனை என்றால் என்ன?
அடிப்படையாக ஒரு ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு தேவையானவை எவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பட்டியல் என்றே இதைச் சொல்லலாம். குழந்தை பெறுவதும் அதன் மூலம் “பெற்றோர்” என்ற நிலையை அடைவதும் ஒவ்வொருவர் வாழ்விலும் மிகத் தெளிவாக எடுக்க வேண்டிய முடிவுகள். குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்யும் போதே, அதனுடன் பல்வேறு சந்தேகங்கள், பயங்கள், தயக்கங்கள் போன்றவை வந்து விடுகின்றன.
கருத்தரிப்பதற்கு முன்பு மருத்துவ ஆலோசனைகள் ஏன் தேவை?
உங்கள் கர்ப்பத்தை நீங்கள் சரியாகத் திட்டமிடுவதன் மூலம், விவேகமாக, பல விஷயங்களை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும். இவை உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும். பல சமயங்களில், கருத்தரித்துப் பல வாரங்கள் வரை பெரும்பாலான பெண்கள், தாம் கருவுற்றிருக்கிறோம் என்பதையே உணர்வதில்லை.
ஆனால், கருவில் வளரும் குழந்தைக்கு இந்த “முதல் சில வாரங்களின்” வளர்ச்சி மிக மிக முக்கியமானது. இந்தச் சமயத்தில் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், உங்களது கருக் குழநதையின் வளர்ச்சியும் பாதிக்கலாம்.
இவ்வாறு கருத்தரிக்கும் முன்பு நீங்கள் மருத்துவ ஆலோசனை பெறச் செல்லும் போது, மகப்பேறு மருத்துவர், உங்களுக்கும் உங்களுள் உருவாகப் போகும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியவற்றை விளக்கமாகக் கூறுவார்.
நீங்கள் நல்ல சத்துள்ள உணவை உட்கொள்ளுதல், கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய சில விஷயங்களைச் செய்யாதிருத்தல் போன்றவைதான் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு அடிப்படை என்றே கூறலாம்.
இதற்கு முன்பாகவே உள்ள மருத்துவ சிக்கல்கள்
சில பெண்களுக்கு, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம். இரத்த சோகை, ஆஸ்த்துமா. எபிலெப்ஸி அல்லது இதயம் மற்றும் இரத்தக் குழாய்கள் சார்ந்த பிரச்சினைகள் போன்ற நோய்கள் இருக்கலாம். இவர்கள் கருத்தரிக்கும் போது இவர்களுக்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்புகள் ஏற்படலாம்.
சர்க்கரை நோய்
கருவுற்றிருக்கும் பெண்கள், தங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டப்பாட்டிற்குள் வைத்திக்க வேண்டியது மிகவும் அவசியம். சர்க்கரை நோய்க்காக அவர்கள் அதுவரை மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருந்தால், இன்சுலினுக்கு மாற வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
பிறக்கப் போகும் குழந்தைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக குழந்தை கருவில் உருவாகும் சமயத்தில் தாயின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பது மிக அவசியம்.
உயர் இரத்த அழுத்தம்
ஒரு பெண்ணிற்கு உயர்இரத்த அழுத்தம் இருந்தால், அப்பெண் கருத்தரிப்பதற்கு முன்பே, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்காக கர்ப்ப காலத்திலும் பாதுகாப்பாக செயல்பட வேண்டும்.
இரத்த சோகை anemia
இந்தியக் பெண்கள் பலருக்கு, இரும்புச் சத்து குறைபாட்டினால் இரத்தசோகை (anemia) ஏற்படும். எனவே கருவுற்ற பெண்னின் ஹீமோக்கோளபின் அளவைப் பரிசோதித்து தேவைப்பட்டால் இரும்பு சத்து அதிகரிப்பதற்கான மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.
இறந்திருந்தாலோ, மகப்பேறு மருத்துவர் அவ்வாறு நேர்ந்ததற்கான காரணங்களை ஆராய சில பரிசோதனைகளை மேற் கொள்ளலாம்.
முந்தைய குழந்தைப்பேறுகள் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் பத்திரமாக வைத்திருந்து, அதை உங்கள் மருத்துவரிடம் காண்பிப்பது மிகவும் அவசியம்.
குடும்பத்தினரின் மருத்துவப் பின்னணி
சாதாரணமாக பல குடும்பங்களில் சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை இருக்கும். கருவுற்றிருக்கும் தாய்க்கு இந்தநோய்கள் இல்லையென்றாலும் குடும்பத்தினரின் மருத்துவப் பின்னணி பற்றிய விவரங்களை அறிவது அவசியம். ஏனெனில் இவை சில சமயங்களில் கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படலாம்.
உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருத்தல்
நல்ல ஆரோக்கியம் என்பது சரியான உணவு மற்றும் தேவையான உடற்பயிற்சி இவை இரண்டும் இணையும்போதுதான் சாத்தியமாகும். கருத்தரிப்பதற்கு முன்பே, எப்போதும் வழக்கமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால், கர்ப்ப காலத்திலும் எளிதாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கமுடியும். நீங்கள் கருத்தரித்த பின்பு, எந்த அளவு சுறுசுறுப்பாக இயங்கலாம் என்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள்
ஃபோலிக் ஆசிட் கூடுதலாக அளிக்கத் துவங்குதல் கர்ப்பம் தரிப்பதற்கு 1 முதல் 3 மாதங்கள் முன்பு வரை இச்சத்து மிகவும் அவசியம். குழந்தையின் மூளை மற்றும் முதுகுத் தண்டு இவற்றின் முழுமையான சீரான வளர்ச்சிக்கு இது அவசியமாகிறது. கால்சியம். பிறக்கப் போகும் குழந்தைக்கும் தாய்க்கும் மிகவும் அவசியம். பால் மற்றும் தயிர் இவற்றிலிருந்து அதிக அளவு கால்சியம் சத்தைப் பெற முடியும்.
கர்ப்ப காலத்தில் இரத்த சோகை ஏற்படாமல் இருக்க இரும்புச் சத்து தேவை. இரத்த சோகை நோய் இல்லையா என்பதை உறுதுப்படுத்திக் கொள்ள ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் இரும்புச் சத்து மாத்திரைகள் 3 மாதங்கள் அல்லது அதற்கு மேலோ எடுத்துக் கொள்ளலாம், இதன் மூலம் உடலின் தேவையான அளவு இரும்பு சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
ஆஸ்த்துமா
ஆஸ்த்துமாவைப் பொருத்தவரை, கர்ப்ப காலத்தில் மிகுந்த கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். நீங்கள் கருத்தரிக்க திட்டமிடும்போது. இந்நோய்க்கன மருந்துகளில் பாதுகாப்பானவை எவை என்று உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும். ஏனெனில் அவற்றை பயன் படுத்தும்போது இரத்தத்தில் மருந்துகள் கலப்பதில்லை.
வலிப்புநோய் (எபிலெப்ஸி)
பொதுவாக, வலிப்பு நோயால், பாதிக்கப் பட்டிருந்தாலும், வழக்கமாக மருந்து எடுத்து கொள்பவராக இருந்தால், பெரும்பாலானவர்களுக்கு. கருத்தரிக்க முயற்சிப்பது பாதுகாப்பானதாகத்தான் இருக்கும்.
வலிப்பு நோய்க்குக் கொடுக்கப்படும் பல மருந்துகள் கருக் குழந்தைக்கு சில அசாதாரண இயல்புகளை, உடற்கூறுகளை ஏற்படுத்தக் கூடியவை. ஆனாலும் இரண்டு அல்லது முன்று மருந்துக்குப் பதிலாக ஒரே ஒரு மருந்து கொடுக்கப்பட்டால், இத்தகைய ஆபத்துகளுக்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன.
எனவே கருத்தரிக்கத் திட்டமிடும்போதே உங்கள் மருத்துவரிடம் எந்த மருந்து மிகவும் அவசியம் அதே சமயம் நீங்கள் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தி விடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
முந்தைய கருத்தரிப்புகளின்போது ஏற்பட்ட பிரச்சினைகள்
முந்தைய கருத்தரிப்புகளின் போது ஏற்பட்ட சில பிரச்சனைகள், சில சமயங்களில் மறுபடியும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஒரு முறைக்கு மேல் குறைப் பிரசவம் ஏற்பட்டிருந்தாலோ, இதற்கு முன்பு குழந்தை பிறக்கும் போதே குறைபாடுகளுடன் பிறந்திருந்தாலோ, இறந்தே பிறந்திருந்தாலோ, பிறந்தவுடன்
ஃபோலிக் ஆசிட் கீழ்க்கண்டவற்றில் உள்ளது
பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகள்
சிட்ரஸ் பழங்கள் மற்றும் பழரசங்கள்(ஆரஞ்சு போன்றவை)
உறுப்பு இறைச்சி (கல்லீரல் போன்றவை)
உலர்ந்த பயறு வகைகள் (ராஜ்மா, காபூலி, சென்னா, சாராமணி)
வைட்டமின் மாத்திரைகள்.
தொற்றுக்களைத் தடுத்தல்
ரூபெல்லா அல்லது ஜெர்மன் மீஸல்ஸ் என்பது மிகத் தீவிரமான ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படக்கூடிய தொற்றாகும்.
இதன் மூலம் குழந்தைக்கு தீவிரமான பிரச்சனைகள் ஏற்படலாம். அதுவும் குறிப்பாக கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாதங்களில் ஏற்பட்டால், குழந்தைக்குப் பிரச்சினைகள் அதிகமாகலாம்.
கருத்தரிக்க திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணிற்கும் இத்தொற்று இருக்கிறதா என்பதை பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அல்லது நேரடியாகவே “ரூபெல்லா” வை எதிர்க்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். தடுப்பூசி போடப்பட்டு மூன்று மாதங்கள் வரை கருத்தரிக்காமல் இருப்பது மிகவும் அவசியம்.
வைரல் ஹெப்படைடிஸ்
ஹெப்படைடிஸ் ‘B’ க்கு எதிரான “தடுப்பூசி” போட்டுக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு இதற்கு முன்பே ஹெப்படைடிஸ் ‘B’ இருந்திருந்தால், உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் தகவல் அளிக்க வேண்டும். அப்போதுதான் அவரால் குழந்தைக்கு அத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
காப்பீடு மற்றும் மகப்பேறு விடுமுறை இவை குறித்து திட்டமிடுதல்
நீங்கள் எடுத்திருக்கும் காப்பீட்டின் கீழ் (இன்ஷ்யூரன்ஸ்) மகப்பேறு மற்றும் பிரசவத்தின் போது ஏற்படக் கூடிய சிக்கல்கள் போன்றவற்றிற்கு காப்பீட்டுத் தொகை கிடைக்குமா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
மேலும் நீங்கள் பணிபுரியும் இடத்தில் எத்தனை நாட்கள் பிரசவத்திற்காக விடுப்பு கிடைக்கும் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளவும். குழந்தை பிறந்த பிறகு குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு குடும்பத்தினரின் உதவியுடன் திட்டமிட இது மிகவும் உதவியாக இருக்கும்.
நீங்கள் பிரசவத்திற்கு உங்கள் தாய் வீட்டிற்கு செல்வதாக இருந்தால், பயணத்தை வெகு நாட்கள் வரை ஒத்திப் போட வேண்டாம்.
நீங்கள் அலுவலகம் செல்பவராக இருந்தாலோ அல்லது உங்கள் முதல் குழந்தை பள்ளிக்குச் செல்வதாக இருந்தாலோ நீங்கள் தாய்வீடு செல்வதை முடிந்தவரை ஒத்திப்போட நினைக்கலாம்.
ஆனாலும் தோராயமாக பிரசவம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் நாளுக்கு பீuமீ பீணீtமீ 6 வாரங்களுக்கு முன்பு பயணம் செய்வதே சிறந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதாவது கருத்தரித்து 34 வாரங்கள் உங்கள் தாய் வீட்டிற்குச் சென்றவுடன் உடனடியாகத் தெரிவிக்க வேண்டிய விவரங்கள் உள்ளனவா என்று இந்த மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
சாதாரணமாக பிரசவத்திற்கு முந்தைய 6 வாரங்களில்தான் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே 6 வாரங்களுக்கு முன்பே சென்றுவிடுவது நல்லது.
மேலும் உங்களது புதிய மருத்துவரிடம் நன்கு பழகி அவர் உங்களை நன்கு புரிந்து கொள்ளவும் இந்த கால அவகாசம் மிகுந்த உதவியாக இருக்கும்.
கருத்தரிப்பதற்கு முன்பு செய்ய வேண்டியவை
- ஒரு சரிபார்ப்பு பட்டியல்
- ஃபோலிக் ஆசிட் எடுத்துக் கொள்ள வேண்டும்
- கருத்தரிப்பதற்கு முன்பு மருத்துவரை ஆலோசிக்கவும் பல் மருத்துவரையும் சந்தித்து ஆலோசனை பெறவும்
- சரியான உணவு உட்கொள்ளவும்
- சரியான எடையுடன் உடலை, ஆரோக்கியமாக வைத்திருக்கவும்
- தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளவும்
- ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்களையும் இரசாயனப் பொருட்களையும் தவிர்க்கவும்.
- உங்கள் குடும்பத்தில் பரம்பரையாக இருந்து வரும் பிரச்சினைகள் /நோய்கள் ஏதேனும் உள்ளனவா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
- மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்
- நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் அதை நிறுத்தவும். புகைபிடிப்பவர் அருகில் இருப்பதையும் தவிர்க்கவும்.
- மது அருந்துபவராக இருந்தால் அதை நிறுத்தவும்.
நான் கருவுற்றிருக்கிறேனா?
பொதுவாகப் பல பெண்கள் கேட்கும் கேள்வி “நான் கருவுற்றிருக்கிறேனா?” என்பது தான். முதல் முறை கர்ப்பம் தரிக்கும்போது கூட, முந்தைய அனுபவம் இல்லாத போது கூட, கர்ப்பம் தரிக்கும் போது ஏற்படும். அறிகுறிகளை பலர் அறிந்திருப்பார்கள்.
முன்பே கருத்தரித்த அனுபவம் உடையவர்கள், அடுத்த முறை கருத்தரிக்கும் போது, முன்பு தோன்றிய அறிகுறிகளை அடையாளம் கண்டு கொள்வார்கள். ஆனால் சில பெண்களுக்கு ஒரு முறை இந்த அறிகுறிகள் மிகத் தீவிரமாகவும், மறு முறை மிக லேசாகவும் தோன்றலாம்.
ஒவ்வொரு கர்ப்பமும் தனிப்பட்டது. தனித்துவமானது. ஒரு முறை தோன்றிய அறிகுறிகள் அடுத்த முறை தோன்றாமலே போவதும், ஒரு முறை இருந்த அளவு இந்த அறிகுறிகள் அடுத்த முறை தீவிரமாக இல்லாதிருப்பதும் மிகவும் சகஜம்தான்.
கருவுற்றிருக்கிறோமா என்று எப்போது சந்தேகம் தோன்றலாம்?
மாதவிடாய் தப்புதல்
கருவுற்றிருக்கிறோமா என்று ஒருவர் சந்தேகப்பட பெரும்பாலான சமயங்களில் இதுதான் காரணமாக இருக்கும். மாதவிடாய் சுழற்சிகள் மிகச் சரியாக உள்ள பெண்கள் மாதவிடாய் தவறிப்போனால் அதைத்தான் முதல் அறிகுறியாகக் கொள்வார்கள். ஆனால் சிறுநீர்ப் பரிசோதனை அல்லது இரத்தப் பரிசோதனை, அதைத் தொடர்ந்து உட்புறப் பரிசோதனை போன்றவைதான் கர்ப்பத்தை உறுதிப்படுத்தமுடியும்.
எப்போதாவது சில இயக்குநீர் (Harmone) பிரச்சனைகளால்கூட மாதவிடாய் தாமதமாகலாம். நீர்கள் கர்ப்பம் தரிக்க திட்டமிட்டு முயல்பவராக இருந்தால் மாதவிடாய், தேதிகளை கவனமாகக் குறித்து வைத்துக் கொள்வது அவசியம்.
ஒவ்வொரு முறையும் மாதவிடாய் தொடங்கும் நாளை காலண்டரில் குறித்து வைக்கவும். இந்தத் தேதியின் மூலம்தான் பிரசவ நாளைக் கணக்கிட முடியும்.
மாதவிடாய் ஏன் தவறிப் போகிறது?
ஒவ்வொரு மாதமும், மூளையிலிருந்து சினைப் பைக்கு, ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்னும் இயக்கு நீரை வெளியேற்றச் சொல்லி. ஆணை பிறப்பிக்கப் படுகிறது. இந்த ஈஸ்ட்ரோஜென் கர்ப்பப்பையின் உட்புறப்படலத்தின் மேல் (endometrium) படருகிறது. உடனே கர்ப்பப்பையின் உட்புறச் சவ்வு தடிமனாகி மேலும் பஞ்சுபோல் ஆகிறது.
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக் காலத்தின் நடுப்பகுதியில் அதாவது 11 & 16வது நாளுக்குள் ஒரு சினை முட்டை உருவாகும். இதைத் தொடர்ந்து சினைப்பையில் ப்ரோஜெஸ்டிரான் என்ற இயக்குநீர் சுரக்கும்.
அந்த சுழற்சியில் முட்டையில் கருத்தரித்தல் நிகழவில்லையென்றால், ப்ரோஜெஸ்டிரான் அளவு குறைய ஆரம்பிக்கிறது. கர்ப்பப்பையின் உட்புறச் சவ்வுப்படலம் வெளியே தள்ளப்படுகிறது. இதுவே மாதவிடாய் எனப்படுகிறது.
சொல்லப்போனால், மாதவிடாய் என்பதையே “ஏமாந்து நிற்கும் கர்ப்பப்பையின் இரத்தக் கண்ணீர் என்றே குறிப்பிடுவார்கள்” கருத்தரித்தல் நிகழும்போது ப்ரோஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் அளவுகள் மிகவேகமாக அதிகரிக்கின்றன. கர்ப்பப் பையின் உட்புறம் மேலும் தடிமனாகி, கருவை வரவேற்கத் தயாராகிறது. அவ்வாறு நிகழும் போது மாதவிடாய் தப்பிப் போகிறது. கடைசியாக மாதவிடாய் தொடங்கிய நாளின் அடிப்படையில்தான் பிரசவ தேதி கணக்கிடப்படுகிறது.
பிரசவத் தேதியைக் கணக்கிடுதல்
சென்ற முறை மாதவிடாய் தொடங்கிய நாளிலிருந்து சரியாக 2 வாரங்களில் “கருத்தரித்தல்” ஏற்பட்டிருக்கிறது என்ற அனுமானத்தல் பிரசவத் தேதி கணக்கிடப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் கீழ்க்கண்ட முறையில்தான் பிரசவத் தேதியைக் கணக்கிடுகிறார்கள். கடைசியாக மாதவிடாய் தொடங்கிய தினத்திலிருந்து 7 நாட்களைக் கூட்டி, 3 மாதங்களைக் கழித்தால் கிடைக்கும் தேதிதான் பிரசவத் தேதியாகக் கணக்கிடப்படுகிறது.
ஏன் மார்பகங்கள் மிருதுவாகின்றன; புண்ணாகின்றன?
கருத்தரித்தவுடன் உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் போன்ற இயக்குநீநர்களை அதிகம் சுரக்க சக்தி இருக்காது போல் உணர்வீர்கள். இரவில் நன்கு தூங்கினாலும், காலையில் மிகுந்த சோர்வுடன், சோம்பலாக எழுந்திருப்பது வழக்கமாகி இருக்கும்.
முடியும்போதெல்லாம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் சோர்வடையும் போதெல்லாம் அதைப் புரிந்துகொண்டு ஓய்வெடுங்கள். முடிந்தால் வெளியிலிருந்து உணவு வரவழைத்துக் கொள்ளுங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியை நாடுங்கள். இரவில் விரைவிலேயே உறங்கச் சென்று விடுங்கள். உங்கள் மூத்த குழந்தை குழந்தைகளை உங்கள் கணவர் சற்று வெளியே அழைத்துச் சென்றால் உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்.
கவலைப்படாதீர்கள்! இவையெல்லாமே கர்ப்ப காலத்தின் முதல் 12 & 14 வாரங்களுக்கு இருக்கும். உங்கள் உடலில் சுரக்கும் இயக்கு நீர்களால் ஏற்படும் வளர்சியை மாற்றங்களுக்கு (metabolic changes) உங்கள் உடல் பழகி விட்டால் இந்த அறிகுறிகள் மறையத் தொடங்கி விடும்.
பின்பு நல்ல சுறுசுறுப்பாகி, அதிக சக்தியுடன் செயல்படத் தொடங்குவீர்கள். சில பெண்கள் வேடிக்கையாக “இப்போது கருத்தரிப்பது போலவே இல்லையே” என்று கூடக் குறிப்பிடுவார்கள். தன் மனைவி தூங்கும் போது அவளை எழுப்பாமல் அவளது வேலைகளைச் செய்யும் கணவனுக்கு ஈடாக
தொடரும்….
கர்ப்பத்திற்கான பரிசோதனைகள்
இந்தப் பரிசோதனைகள் மூலம், கருவுற்றபின் உங்கள் சிறுநீரில் சுரக்கக் கூடிய ஹ்யூமன் கோரியானிக் கோனாடாட்ராபின் (hCG) எனம் இயக்குநீரின் அளவைக் கண்டறிவார்கள். ஒவ்வொரு பரிசோதனையும் கண்டறியும் சிறுநீலலின் அளவு மிகுந்த வித்தியாசப்படும். அதேபோல சுரக்கும் hCG இயக்குநீரின் அளவும் பெண்ணுக்குப் பெண் வேறுபடலாம். “ஹோம் பிரக்னன்ஸி கிட்ஸ்” என்று கடைகளில் கிடைக்கும். வீட்டிலேயே பரிசோதனை செய்து கர்ப்பத்தை உறுதி செய்யும் வசதி மூலம் 25 & 50 ML hCG யை அளந்து கண்டறிய முடியும். பொதுவாக கர்ப்பம் தரித்து 4 & 5 வாரங்களில் இந்த அளவு hCG சிறுநீரில் காணப்படும். காலையில் எழுந்ததும் முதலில் வெளிவரும் சிறுநீரில்தான் இது அதிக அளவில் இருக்கும். ஆனாலும் பல முறை சிறுநீர் கழித்து 4 மணிநேரத்திற்குப் பிறகு இப்பரிசோதனையை செய்து கொள்ளலாம். அந்த இடைவெளியில் hCG சிறுநீரில் சேகரிக்கப்படும். பொதுவாக இப்பரிசோதனைகள் மிக சரியான முடிவைத்தான் யூரும். சில சமயங்களில் தவறான முடிவுகள் வரலாம். முதலில் “இல்லை என்ற முடிவு வந்து பின்பு கர்ப்பம் உறுதியானால், அதற்குக் காரணம், அந்தப் பரிசோதனை மிகவும் ஆரம்ப காலத்திலேயே செய்யப்பட்டிருப்பதாக இருக்கும். சில சமயங்களில் நீங்கள் கர்ப்பம் தரிக்காத போதும் கூட +Ve என்று முடிவு வரலாம். இது போன்ற ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.